Friday, February 10, 2012

திருடாதே கொரங்கே திருடாதே-சேவிங் செய்த குரங்கு- 4


நமக்கு நம்ம பொருட்களை பாதுகாப்பதில் ரொம்ப அக்கறை,



என்னதான் நாம வில்லத்தனமா யோசிச்சு நம்ம பொருட்களை பாதுகாக்க முயற்சி செய்தாலும் , திருடர்களிடம்   அவை தப்புவதில்லை,


இருந்தாலும் நாம் முயற்சியை கைவிடுவதில்லை,


எங்கேயிருந்து மனிதனுக்கு இந்த திருட்டு புத்தி வந்தது ?

இதுக்கு என்னோட பதில் என்னவா இருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும் ,

ஆம் இதுவும் ஒரு குரங்கு புத்தி தான் .
-----------------------------------------------------------------------------------------------------
         Desmond morris ஒரு tv show க்காக the great banana theft and egg omelet ன்னு ஒரு சீரியல் பண்ணுனாரு . 

    அவரு ரூம்ல வாழைப்பழம் டின்னோட  திருடு போய்டுச்சு , அவரு ரூமுக்கு அவர் ஆராய்ச்சிக்காக வைத்திருந்த குரங்குகள் வந்து போகும் , அவருக்கு அந்த குரங்குகள் மீது சந்தேகம் . யாரு இந்த தப்ப சரியா கண்டுபிடிப்பாங்கன்னு யோசிச்சாரு . வாசிம் கானா இருந்தா விஜயகாந்த் கண்டுபிடிச்சுடுவாரு , ஆனா திருடினது குரங்காச்சே , 


வேற வழியே இல்லைன்னு அவரு scotland yard க்கு கம்ப்ளைன் பண்ணாரு .

scotland yard லேருந்து ரிடையர் ஆனா cheif  சுப்ரிண்டன்ட் Bob cherryl ன்னு    ஒரு பெரிய கை இந்த கேச விசாரிச்சாரு . வாழைப்பழ டின்இல் இருந்த குற்றவாளியின் கை ரேகையை ,எல்லா குரங்குகளின் கைரேகையோடு ஒப்பிட்டு பார்த்தார் .

கடைசியில் Annabelle என்கின்ற பேராசை பிடித்த ஒரு குண்டு ஒரான்கூடான்  கைரேகையோடு கச்சிதமாக போருந்திப்போவதை கண்டுபிடித்தார் .


குண்டு Annabelle வாழைப்பழமும்  கையுமாக பிடிபட்டாள்?

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் :
 முதலாம் உண்மை :

குரங்குகளுக்கும் நம்மை போல கைரேகை உண்டு ( மாடுகளுக்கு கூட மூக்கு ரேகை ஒன்றுக்கு ஒன்று மாறுபடும் -muzzle ).



இது குரங்கிலிருந்து evolve ஆகி வந்த வந்த எனது கைரேகையும் ,ஒரு குரங்கின் கைரேகையும்(indian macaque monkey) - பாருங்கள் இருவருக்கும் ஒரே போல அமைப்பு இருப்பதை .
 
இரண்டாவது : நமது திருட்டு புத்தியும் குரங்கிலிருந்து வந்தது தான்.

பின்குறிப்பு :

இன்னும் பல குரங்கு புத்திகள் உள்ளன நம்மிடம் , அதற்கான ஆதாரங்களும் நிறைய , இருப்பினும் இது போதும் என்று நினைக்கிறேன் ,

அடுத்து எப்படி மனிதன் சேவிங் செய்த குரங்கு ஆனான் , அவனது முடி எங்கே போயிற்று என்பதற்கான விடைகளை பார்க்கலாம் நண்பர்களே.

கைகொடுக்கும்  கை :


2 comments:

  1. அதான் குரங்கும் மனிதனும் ஒண்ணு என்று சொன்னார்களோ...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் குரங்கு புத்தி உள்ளது சார்

      Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...