Showing posts with label கற்றது வெட்னரி ஒரு self scratching. Show all posts
Showing posts with label கற்றது வெட்னரி ஒரு self scratching. Show all posts

Tuesday, January 17, 2012

கற்றது வெட்னரி 5 - நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு


நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு , அவன் கிராஸ் ஆகும் வரை ,

அவன் பெயர் சங்கர சாமி - எங்களுக்கு அவன் ஒரு பயங்கர சாமி.

நாய்க்கு மூக்குல சுண்டி விட்டா ஒரு மாதிரி உர்ர்ன்னு லுக் விடுமே , அதே மாறி இருப்பான் .

ஒரு நல்ல சனிக்கிழமையா பாத்து கையில ரெண்டு Recordடோட
என் அரை கதவை தட்டினான் அவன் ,

டாய் இன்னைக்கு ராதிரிக்குள்ளார இந்த ரெகார்ட எழுதி வை நாளைக்கு வந்து வாங்கிக்குறேன் .

2 நாள் கழித்து:
உன்னோட கையெழுத்து எனக்கு புடிச்சு போச்சு படம் வேற நல்லா வரையிற , இந்த நாலு ரெகார்டையும் எழுதி வை ..

ஒரு வாரம் கழித்து வேறு இரண்டு சீனியர்கள் :.........,,,

ஏண்டா சங்கரனுக்கு மட்டும் தான் ரெகார்ட எழுதுவியா ?
இதையும் எழுது.

நான் : சார் ஒரு வாரத்துல எனக்கு பரீட்சை இருக்கு ........................



பேசாம வாங்கிட்டு வந்து எழுதியிரக்கலாமோ , என்று நினைத்துக்கொண்டே கன்னத்தில் விரல் தடம் ஏதும் பதிந்திருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்தேன்,

அப்பாடா பர்சனாலிடிக்கு ஒன்னும் பாதிப்பு இல்லை .

அன்று  இரவு சங்கரசாமி தலைகாணி சைசுக்கு இருந்த பெத்தாலஜி ரெகார்டை என்னிடம் நீட்டினான் ,

நான் அவனிடம் …..

சார் ஏற்கனவே ரெண்டு சார் ரெகார்ட குடுத்துட்டு போய் இருக்காங்க....................................




இந்த முறை பர்சனாலிடிக்கு பயங்கர பாதிப்பு……
;
;
;
இதை இப்படியே விடக்கூடாது , இவனுக்கு எல்லாம் அவன் தான் சரி பட்டு வருவான் ,

அவனை எழுப்ப முடிவு செய்தேன் ,

நீண்ட நாட்களாக  கும்பகர்ணனை போல எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த டெரர் Dolittle ஒரு வில்லசிரிப்புடன் எழுந்தான் .


சங்கரா உனக்கு இனி சங்கு தாண்டா ....


Dolittle version 2 – the game starts now .

------------------------------------------------------------------------------------

அடுத்த நாள் , எனது dayscholar நண்பனிடம் சங்கரனின் ரெகார்டை குடுத்து , " மச்சி இத உன்னோட வீட்ல வச்சிருடா , நான் கேக்கும் போது தாஇந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் ", என்று கூறி விட்டு விடுதிக்கு திரும்பினேன் .

-------------------------------------------------------------------------------------------------------------

அன்று இரவு :

ரெகார்டை கேட்ட சங்கரனிடம் ,

" சார் இங்க தான் டேபிள் மேல வச்சுருந்தேன் , எங்க போச்சுன்னே தெரியல ," என்றேன் .


அவன் பதறியபடி , டேய் நாளைக்கு எனக்கு practicals , நல்லா தேடுடா நாயே என்று சீறினான் .

அவன் பேசுமேன்ட்டு ஆட்டம் காண ஆரம்பித்து இருந்தது .

இன்னும் ஒரு மணி நேரத்துல வருவேன் ரெகார்ட் இங்க இருக்கணும் என்று உறுமினான் .

நான் மனசுக்குள்ளயே  நீ என்ன முக்குனாலும் நடக்காதுடா என்றேன் .

ஒரு மணி நேரம் கழித்து அவனது நண்பர்களோடு என் அறைக்குள் நுழைந்தான் ,


எனது பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது , எனது நண்பர்களின் அறையும் சோதனை இடப்பட்டது .


சங்கரன் கிட்டத்தட்ட அழுது விடுவான் போலிருந்தான் .

என்னிடம் வந்து " தம்பி நல்லா யோசிச்சு பாருடா , இது என்னோட life matter , உனக்கே தெரியும் ஒரு பாடத்துல fail  ஆனாலும் ஒரு வருஷமே போயிரும்டா".

version 2 dolittle சொல்லியும் கேக்காமல் , நான் அந்த காரியத்தை செய்தேன் .

அடுத்தநாள் காலையில்   சங்கரனிடம் அவனது ரெகார்டை குடுத்தேன் .
-------------------------------------------------------------------------------------------------------------

பரீட்சை முடிந்த அடுத்த நாள் இரவு சங்கரன் சரக்கின் வாடை சரீரமெங்கும் வீச , தள்ளாடிய படி தனது நண்பர்களோடு எனது அறைக்கு வந்தான் .

கொத்தாக எனது சட்டையை பிடித்தான்

சொல்றா நாயே , வேணும்ன்னு தானே செஞ்ச .

சொல்றா.......................

என்னால் ஜீரணிக்க முடியாத ஒரு கெட்ட வார்த்தை அவன் வாயில் இருந்து வெளிப்பட்டது .


என்ன நடந்தது என்றே தெரியவில்லை ,


சங்கரனின் கன்னத்தில் எனது கைரேகைகள் ....

-------------------------------------------------------------------------------------------------------------

வீங்கி இருந்த உதடுகள் விம்மியபடி அப்பாவிடம் தொலை பேசியில்
இனிமேலும் என்னால் விடுதியில் இருக்க முடியாது என்றேன் .


அப்பாவின் நண்பர் உதவியோடு சூலை மேட்டில் ஒரு மேன்சனில் குடிபுகுந்தேன் ,

பக்கத்துக்கு அரை அண்ணனின் கணினியில் பல வண்ணப்படங்களை பார்த்தவாறு பொழுதை நன்றாக ஓட்டினேன் .


ஒரு நாள் நண்பன் ஒருவன் ஒரு நல்ல செய்தி சொன்னான் ," மச்சி சங்கரன hostel   விட்டு expel பண்ணிட்டாங்கடா ,"


எப்படி மச்சி?

நம்ம தனா கம்ப்ளைன் பண்ணிட்டான்டா.

சந்தோசமாக மேன்சனில் எனது அறைக்கு திரும்பினேன் .


எனது அறையில் மல்லாக்க படுத்து  விட்டதை வெறித்த படி கால்களை அகற்றி கைலிக்குள் காற்று வாங்கிக்கொண்டு இருந்தான் எனது புது room met   பயங்கர சாமி @ சங்கரசாமி.

Saturday, January 14, 2012

கற்றது வெட்னரி-அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்


தொடர்ந்து நாலு நாள் விடுமுறை , அப்பாடா வீட்டுக்கு ஓடிரலாம், வீட்ல போய் என்ன பண்ணலாம் ?

வீட்டில் :

அப்பா : என்னடா எங்க bag உம் கையுமா எங்க  கிளம்பிட்ட   ?

நான் : veterinary  ஆஸ்பத்திரி போறேன்ப்பா.

அப்பா : எதுக்கு ?

நான் : தொழில் கத்துக்க.

ஆஸ்பத்திரில் நீண்ட வரிசையில் கையில் கோழி , நாய் , ஆடுகளோடு மக்கள் நின்று கொண்டிருந்தார்கள் , அந்த வரிசையில் நானும் ஒரு கையில் shoulder bag கோடு நின்றேன் , பைக்குள் பாம்பு வைத்திருப்பானோ என்றபடி எல்லோரும் என்னை ஒரு ரேஞ்சாக பார்த்தனர் .

வானத்தை வெறித்தபடி தாடையை சொரிந்து கொண்டு நின்றேன்
எனது முறை வந்தது .டாக்டர் என்னையும் எனது bag யும்  ஒரு மாதிரியாக பார்த்தார்.

டாக்டர் : தம்பி பையில என்ன கொண்டு வந்துருகீக ? அணிலா ?

நான் : அனாடமி புஸ்தகம் சார் .

டாக்டர் : நாங்க அதுக்கு எல்லாம் வைத்தியம் பாக்குறது இல்ல .

அந்த ஜோக்குக்கு (?) என்ன தவிர எல்லோரும் சிரித்து என்னை அவமானத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றார்கள்   .

டாக்டர் : தம்பி என்ன வேணும் ?

நான் : Fist Year வெட்னரி படிக்கிறேன் சார் .

டாக்டர் உடனே அட்டன்டரை நோக்கி : கிருஷ்ணா டாக்டருக்கு ஒரு சேர் கொண்டு வந்து போடுப்பா .

ஆகா ………………" டாக்டர் " ………..அந்த சொல்லால் என்னை முதன் முதலில் கூப்பிட்டது அவர் தான் . என்னை பாத்து ஐஸ்வர்யா ராய் I love u ன்னு சொல்லிருந்தா கூட அவ்ளோ சந்தோஷ பட்டுருக்க மாட்டேன் ..............

நானும் மதுரக்காரந்தான்டான்னு எல்லோரும் படத்துல சொல்ற மாதிரி , மனசுக்குலயே நானும் டாக்டர் தாண்டான்னு பெருமிதமா சொல்லி பாத்துக்கிட்டேன் .

டாக்டர் : டாக்டர் நம்ம காலேஜு எப்புடி இருக்கு ?

சும்மாவே நான் லொட லொடன்னு பேசுவேன் , பேசுடான்னு ஒரு பெரிய மனுஷன் நாம்மள பாத்து கேட்டுட்டாரு , விடுவனா ?

மாடு ஒன்றுடன் நின்றிந்த விவசாயி ஒருவர் ,காலையிலேயே வந்து வேல நேரத்துல இந்த ஆமவாயன்  உயிரை எடுக்குரானே ,என்பது போல என்னை முறைத்து கொண்டே இருந்தார் .

அதை கண்ட டாக்டர் ' தம்பி நாம பொறுமையா பேசுவோம் ', என்று கையில் கிளவுஸை மாட்டினார்.

நான் உடனே அவரை பார்த்து , சார் எனக்கும் ஒரு கிளவுஸ் தாங்களேன் , நானும் கத்துகிறேன் ,'என்றேன் .

திரும்ப அந்த பெரியவர் என்னை பார்த்து முறைத்தார் ,

அதை கண்ட டாக்டர் சிரித்துக்கொண்டே ," தம்பி ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல , சரி Per Rectal Examination பத்தி கொஞ்சம் படிச்சுட்டு வாங்க, நாளைக்கு சொல்லி தரேன் '.

மாடு வைத்திருந்த பெரியவர் நிம்மதிப்பெருமூச்சு விட்டார் .

அன்று இரவு நான் ," uterus is two horned strucutre ......follicule is fluid filled soft...........luteal cyst............,"


அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் ,


திரும்பவும் அதே பெரியவர் வேறு ஒரு மாட்டை பிடித்து கொண்டு , அதே உஷ்ண முறைப்பை என்னை நோக்கி வீசிக்கொண்டே இருந்தார் .
கொஞ்சம் லேட்டா போய்ட்டேன் , டாக்டர் மாட்டுக்கு சினை ஊசி போட ஆரம்பித்து இருந்தார் .


டாக்டர் : என்ன டாக்டர் எதாச்சும் படிசீங்களா ?

நான் விறைப்பாக : yes sir .

டாக்டர் : என்ன படிச்சீங்க ?

நான் :uterus is two horned strucutre ......follicule is fluid filled soft...........luteal cyst............,

பெரியவர் அதிர்ச்சியாகி , இவ்ளோ நேரம் நல்லா தானேப்பா இருந்தான் என்பத போல ஒரு வித்யாசமான பார்வையை பார்த்தார் .

நான் அதை கண்டும் காணாதது போல luteal cyst  is ,,,.............

டாக்டர் : கிருஷ்ணா டாக்டருக்கு ஒரு கிளவுஸ்   குடுப்பா .

ஆர்வமாய் கிளவுஸை மாட்டிகொண்டு மாட்டின் பின்னால் போய் நின்றேன் ,

பெரியவர் என்னை பார்த்து ,இவன் உள்ள என்னத்த அத்து விடப்போரானோ  என்று நினைத்த படி  ஒரு பயம் கலந்த பார்வையை காட்டினார் .
அதை கண்டும் காணாதவாறு நான் பின்னால் கை விட்டேன் .


டாக்டர் : தம்பி உள்ள என்ன தெரியிது ?

நான், ஒன்னுமே புரியலயே , இருட்டு அறையில எப்பிடி கருப்பு பூனையை  தேடுரதுன்னு குழம்பி நின்னேன் .

டாக்டர் : தம்பி உங்களைதான் ,உள்ள என்ன தெரியிது ?

அந்த பெரியவர் வேற , என்ன வெறும் வாயி  தான் வேல செய்யிது ங்குற மாதிரி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்,

எதையாவது சொல்லி சமாளிடா dolittle ….

நான் :உள்ள ஒரு Solid  Mass  தெரியிது சார் .

டாக்டர் : டாக்டர் அதுக்கு பேருதான் சாணி , அத முதல்ல வாரி வெளிய போடுங்க .

பெரியவர் ,அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் ,ரேஞ்சில் வாய் விட்டு சிரித்தார்  .


ஒரு விஷயம் அன்று எனக்கு தெளிவாக புரிந்தது , " ஏட்டு சுரைக்காயை வைத்து BURGER செய்ய முடியாது ".

'திணையியம். தமிழின் ஆதி மெய்யியல்' புத்தகத்தின் வாசிப்பு அனுபவம்.

 திரு.பாமயன் ஐயா அவர்கள் எழுதிய 'திணையியம்' எனும் புத்தகத்தை வெயில் வாட்டும் வேனில் கால நண்பகல் பேருந்து பயணத்திலே வாசிக்கக் கையில்...