Wednesday, February 1, 2012

சேவிங் செய்த குரங்கு


தலைவர் பாட்சாவுல ஒரு டயலாக  சொல்லுவாரு , ஞாபகம்   இருக்கா ?

         எல்லா உயிரும் தனது செயலை ஒன்று இதயத்தை ( instinct ) கேட்டு செய்கிறது , இல்லை மூளையை (learned behavior)  கேட்டு செய்கிறது.

அது இன்னாப்பா  instinct  ,learned behavior ?

learned behavior - பட்டறிவு அல்லது அனுபவ அறிவு:

         உங்க பாஸ் ஒரு மொக்க ஜோக் சொல்றாரு , மனசுக்குள்ள கடியா இருந்தாலும் , அந்த நாயால நமக்கு நிறைய காரியம் ஆக வேண்டிஉள்ளது , அதுக்காக சிரிச்சு ( சோப்பு போட்டு ) வைப்போம் ன்னு micro second குள்ள உங்க அனுபவ அறிவின் (learned behavior )துணையோடு , செம்மை ஜோக் சார் , எப்புடி உங்களால மட்டும் இப்புடின்னு சொல்றீங்களே அது தான் learned behavior.




instinct - உள்ளுணர்வு அல்லது உள்ளறிவு:

     அதே  பாஸ்  வழுக்கி  விழுந்தா உங்களையும் அறியாம வாய் விட்டு சிரிப்பீங்களே , அது தான்  instinct  , அது தான் உங்க originality .



நாம எல்லாம் நம்ம instinct ட்ட மறைச்சுட்டு learned behavior ஐ வெளியே காட்டிகிட்டு திரியிறோம் .

     ஆனா மிருகங்கள் எல்லாம் அப்புடி இல்லை , முக்கா வாசிக்கும் மேல  ( around  95 %  )instinct  டை மட்டுமே நம்பி வாழ்வன.இதயத்துல என்ன தோணுதோ அத கேட்டு பட்டுன்னு செஞ்சிடும் ..

      ஒற்றுமை , சகோதர பாசம் , தாயன்பு எல்லாமே அதுக்கு instinct  தான் .ஆனா நாம learned  behavior ல தான் வண்டி ஓட்டிகிட்டு இருக்கோம் .
-------------------------------------------------------------------------------------------------------------
     சிறுத்தை தான் உலகிலேயே வேகமா ஓடக்கூடியது , (ஆனா பத்து நிமிஷம் வரை தான் வேகத்தை மெயின்டெயின் பண்ணும் ), 

     அது ஒரு இம்பாலா மானை குறி வச்சு துரத்த ஆரம்பிக்குது , சேசிங்கின் போது இம்பாலா டயர்டு ஆகி சிறுத்தை கிட்ட மாட்டும் சமயம் வரும் போது , அதை காணும் சகோதர இம்பாலா , இப்புடியே போனா நம்ம அண்ணனை போட்டுருவாங்கன்னு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காரியத்தை செய்யும் .



     சிறுத்தையோட   பக்கமா ஓடி அதோட கவனத்தை தன் பக்கமா திருப்பும் ( அழுவாதீங்க ப்ளீஸ் ) , சிறுத்தையோட stamina அதுக்குள்ள கொறஞ்சிருக்கும் , அதுனால இம்பாலா முக்காவாசி தப்பிச்சிடும் .

அப்புடி என்ன இம்பாலா தனது உயிரை பணயம் வச்சு அண்ணன் காப்பாத்தனும் ?

இதுனால இம்பாலா வுக்கு என்ன நன்மை ?

ஒன்னும் பெருசா இல்லை பாஸ் , அண்ணன்  தனது ஜீனை பகிர்ந்தவன் , தனது ஜீனை உலகில் நிலை நிறுத்தவே இந்த கஷ்டம் எல்லாம் .

ஓடிப்போய் இதை ஒரு தடவை படிச்சிட்டு வாங்க பாப்போம் .
----------------------------------------------------------------------------------------------------------
survival லுக்காக உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக உதவிக்கொள்ளும் .

சரி , உதவியை வாங்கிகிட்டு , திரும்ப உதவி செய்யாமல் ஏமாற்றினால் ?

அப்படிப்பட்ட எமாற்றுகாரர்களும் உண்டு , 

அதுவும் ஒரு particular உயிரினத்தில் இது ரொம்பவும் காமன் (சரியா வாசி).

அந்த உயிரினம் Homo sapiens  என்று அழைக்கப்படும் சேவிங் செய்த குரங்குகள் .


the naked ape , தமிழில்  மனிதன் என்று அழைப்பார்கள் .

அவனுடைய குரங்கு புத்தி எங்கேயிருந்து வந்தது ?

ஏன் அவன் சேவிங் செஞ்ச குரங்கு மாதிரி இருக்கான் ?

பின் குறிப்பு :

இந்த பதிவில் desmond morris அவர்கள் எழுதிய the naked ape இல் இருந்தும் + எனது அனுபவங்களும் +  நான் அறிந்த ,படித்த மற்றும் பார்த்த விலங்குகளின் பழக்க வழக்கங்களும் + ஆஷிக் அண்ணனின் இந்த கேள்விகளுக்கான பதில்களாகவும் (குரங்கு -> நியாண்டர்தல் (Neandertals or Neanderthals) -> மனிதன்?
 http://www.ethirkkural.com/2010/10/evolution-stheory-harry-potter-stories.html ) , ஒரு மாதிரி கலந்து கட்டி காரக்குழம்பு மாறி எழுத உள்ளேன்  .

வாங்க பழகலாம் ....

ஆஷிக் அண்ணனுக்கு :

ஆஷிக் அண்ணே இது குறிஞ்ச பட்சம் அஞ்சு பதிவாவது எடுக்கும் , இந்த சீரிசை முடித்த பிறகு மாற்று கருத்துக்கள்  ஏதேனும் இருந்தால் வாதிடலாம் .

4 comments:

  1. இரண்டாம் பகுதிதான் முதலில் படிச்சேன்.அது இதயத்தில் சிரிச்சது.

    இந்த பின்னூட்டம் மூளை சார்ந்தது:)

    ReplyDelete
  2. நல்ல ஆரம்பம் தம்பி! நீ போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நான் அப்பப்போ வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்!

    ReplyDelete

உணவு எந்திரம்

“கொக்கரக்கோ…” அலாரத்தின் சேவல் குரல் கேட்டு முருகன் கண் விழித்தான். “பாட்டி, எத்தனையோ அழகான பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த வித்தியாசமான சத்...