Wednesday, February 22, 2012

பட்டுக்கன்னம் தொட்டு கொள்ள ஒட்டிக்கொள்ளும்

-சேவிங் செய்த குரங்கு- 6



இந்த மிக்கி மவுஸ் படத்த பாருங்களேன் , இது ஒன்னும் பெரிய மோனலிசா ஓவியம் அல்ல ,

சில கோடுகளினால் வரையப்பட்ட ஒரு சிம்பிளான கேலிசித்திரம் --- பெரிய கண்கள் , உப்பிய கன்னங்கள் தவிர பெரிதாக இதில் ஒன்றுமில்லை .

பின்ன எப்புடி இந்த கேலிசித்திரம் இவ்ளோ பெரிய ஹிட் ஆச்சு ?
----------------------------------------------------------------------------------------- 
இதில் ஒரு பெரிய பரிணாம உண்மை ஒளிந்துள்ளது ....

இது நமது தாய்மை உணர்வை ( instinct ) தூண்டி விடுகிறது .
------------------------------------------------------------------------------------------ 
எந்த விலங்கோ , படமோ , எதுவோவாக இருக்கட்டும் ,


உப்பிய கன்னங்கள் , களங்கம் இல்லாத பெரிய கரு விழிகள் , நமது தாயுணர்வை தூண்டி விட்டு , அதன் மேல் ஒரு இனம்புரியாத பாசத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை .


இந்த கள்ளம் இல்லா கண்களை பார்த்தால் , கொலைகாரனுக்கும் பாசஉணர்ச்சி  வராதா இல்லையா ?

------------------------------------------------------------------------------------------------
     எப்படி வால்ட் டிஸ்னீ ,பாச உணர்ச்சியை  காட்டி காசு பார்த்தாரோ , அது போல நாய் இன ப்ரீடர்கள், பொம்மை இன நாய்களை உருவாக்கி , அதன் மேல் ஒரு பாச உணர்வை ஏற்படுத்தி செம்மையா கல்லா கட்டினார்கள் .


இந்த படத்தில் , அந்த பாரிஸ் பாப்பாவை பார்க்காமல் , அவள் கையில் இருக்கும்  நாயை மட்டும் பாருங்கள் ,




அதை நீங்கள் நாய்க்குட்டி என நினைப்பீர்கள் , ஆனால் அது பல குட்டி நாய்களை ஈன வைக்கக்கூடிய திறமை பெற்ற வயதுக்கு வந்த chihuahua இன  ஆண் நாய் .


இது எப்படி சாத்தியம் ? எப்படி ஒரு வயதுக்கு வந்த நாய் , குட்டி போல தோற்றம் அளிக்கிறது ?
-----------------------------------------------------------------------------------------
pedogenesis (paedogenesis) ,Neoteny என்றால் என்ன , இரு வரிகளுக்கு மிகாமல் விளக்கு   ?

pedogenesis : முன்பு குழந்தைக்கு மட்டுமே காணப்பட்ட பண்புகள் , வயதுக்கு வந்த பின்பும் காணப்படுவது .
Neoteny :வளர்ச்சி  மெதுவாக நடை பெறுதல் .


---------------------------------------------------------------------------------------------
நான் போன பதிவில் "பிறந்த சிம்பன்சி குரங்குக்கும் சரி, மனித குழந்தைக்கும் சரி , பிறக்கும் போது  மண்டையில் மட்டும் தான் முடியோடு   இருக்கும் .அது neoteny மூலமாக தாமதம் ஆனால் கிட்டத்தட்ட மனிதன் போலவே  தோற்றம் அளிக்கும் ."
என்று கூறியிருந்தேன் .

இப்படிதான் pedogenesis (paedogenesis)  மற்றும் Neoteny  மூலமாக குரங்கில் இருந்த முடி மனிதனுக்கு இல்லாமல் போனது என்பது  பல அறிவியல் அறிஞர்களின் கருத்து.

இருப்பினும் சில இடங்களில் மிச்சம் முடி இருந்தது ஏன் என்று போன பதிவிலேயே பார்த்தோம் .


இதை நான் பொசுக்கென்று கூறிவிட்டேன் , இதற்கு ஆதரவான  பல கருத்துக்களை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் ,அதை விக்கிபீடியாவிலேயே எளிதாக விளக்கி உள்ளனர் (Neotenous traits in humans :
These are neotenous traits in humans: flattened face,[2] broadened face,[10] large brain,[2] hairless body,[2] hairless face,[11] small nose,[11] reduction of brow ridge,[2] small teeth,[2] small upper jaw (maxilla),[2] small lower jaw (mandible),[2] thinness of skull bones,[10] limbs proportionately short compared to torso length,[10] longer leg than arm length,[12] larger eyes,[13] and upright stance.[14][7] ).
----------------------------------------------------------------------------------------------
    
       குதிரை , கழுதை , வரிக்குதிரை எல்லாமே equidae family ,( குதிரை குடும்பம் ), எல்லாமே ஒரே போல தோற்றம் அளித்தாலும் , மூக்கு வெளுத்தால் கழுதை , வரி இருந்தால் வரிக்குதிரை என அவைகளுக்குள் அடையாளம் கண்டு கொள்ளும் .




       வரிக்குதிரயிலேயே மூன்று இனங்கள் உண்டு ( the plains zebra, the Grévy's zebra and the mountain zebra ), அதை எப்படி அவைகள் சரியாக பகுத்து அறியும் ,



ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு வகையான வரி ,




 வரிக்கு வரி வரிக்குதிரையின் இனத்திற்கு ஏற்ப மாறுபடும் .
--------------------------------------------------------------------------------------------------------

இது போல தான் குரங்குகளில் பல இனம் , இனத்திற்கு இனம் உடம்பில் hairless patches ( முடிகளற்ற இடம் ) மாறுபடும் ,








சேவிங் செய்த தோற்றம் தான்  மற்ற குரங்குகளிடம் இருந்து நம்மை தனித்துக்காட்டும் மனித சமுதாயத்தின்  அடையாளம் ,




அதிலும் மனித சமுதாயத்தில் பல இனங்கள் அவற்றில் பல வித்யாசங்கள்  உண்டு .

எடுத்து காட்டு :

சீனர்களுக்கு என்ன தான் நெஞ்சில் மஞ்சா சோறு இருந்தாலும் நெஞ்சில் மயிர் கம்மிதான் , 




அதுவும் மீசையும் தாடியும் வித்யாசமாக வளரும் , பார்த்த உடன் கூறிவிடலாம் இவன் சீனன் என்று .


மேற்சொன்ன கருத்து நிறைய ஆராய்ச்சியாளர்களால் ஏற்று கொள்ளப்பட்டது ..


------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் பல தியரிகள்  உண்டு ...

1 ) பிணந்தின்னி கழுகுகள் உண்ணுவதை பார்த்திருக்கிறீர்களா ?



      பிணத்தினுள் முகத்தை கழுத்து வரை புதைத்து உண்ணும் .

    


  இதனால் கழுத்து முழுவதும் ரத்தம் படிந்து , கிருமிகள் அதில் வளர்த்து அதன் மண்டை கழுத்து வரை சொட்டயாகிவிட்டதாய் சொல்கிறார்கள் .

அதுபோல தான் நம் முன்னோர்கள் வேட்டையாடி உடலில் இரத்தம் படிந்த தோலை உடுதியதால் மயிர் போய்விட்டதாக ஒரு கருத்து .

2 ) பேன் தொல்லை (?)

3 )உடல் சூடு ( இது ஒரு நல்ல விளக்கம் கொண்ட கருத்து , தேவை பட்டால் விவாதிக்கலாம் ) etc etc ...
------------------------------------------------------------------------------------------------

         சரி neanderthal , H . erectus இவற்றில் இருந்து மனிதர்கள் வந்த கதையை ( உண்மையை ) பற்றியும் அதில் உள்ள சில சந்தேககங்களை பற்றி விளக்கமாக ஆஷிக் அண்ணன் விளக்கி உள்ளார் , அதை படித்து வைத்திருங்கள் , அடுத்த பதிவில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலை பார்க்கலாம் .

பின்குறிப்பு : இந்த சீரிஸில் வரும் பதிவுகள் பல இடங்களில் நான் படித்த கருத்துக்களை வைத்து எழுதப்பட்டது  , எதுவும் டுபாக்கூர் அல்ல,   referance தேவைபட்டால் தயங்காமல் கேளுங்கள் , குறிப்பிடுகிறேன் .( அனைத்து  referance சையும் சைட் செய்வதற்குள் எனது மண்டை காய்ந்து விடும் , அதனால் தான் .



15 comments:

  1. அது என்ன மாயமோ இல்ல மந்திரமோ தெரியல!! உன்னோட பதிவுகள படிச்சதுக்கப்புறம் அதுல சந்தேகமே வரமாட்டேங்குது! நீ அவ்வளவு நல்லா எழுதுறியா? இல்ல, நான் மேம்போக்கா படிக்கிறனா?

    ReplyDelete
    Replies
    1. நீங்க மேம்போக்கா எழுதல, நான் தான் மேம்போக்கா எழுதுற ஒரு பொறம்போக்கு அண்ணே

      Delete
    2. சாரி அண்ணே ஸ்லிப்பு டங்கு ஆயிடுச்சு --

      நீங்க மேம்போக்கா படிக்கல , நான் தான் மேம்போக்கா எழுதுற ஒரு பொறம்போக்கு அண்ணே

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //அதுபோல தான் நம் முன்னோர்கள் வேட்டையாடி உடலில் இரத்தம் படிந்த தோலை உடுதியதால் மயிர் போய்விட்டதாக ஒரு கருத்து .//

    எமது மூதாதைகளிடம் காடப்பட்ட உடல் மயிர் , எம்மிடம் அதாவது இப்போது உள்ள சந்ததிகளிடம் அற்றுப் போனமைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி ஒன்று உள்ளது.

    அதாவது எந்த ஒரு உடல் பாகம் மனிதனுக்கு தேவையற்று இருக்கிறதோ அந்த பாகமானது பரிணாம வளர்ச்சிப்போக்கில் அற்றுப் போய்விடும். அதுபோல் அதிகமாக பாவனையில் இருக்கும் உறுப்பானது பெரிதாகும் என்கிறது அந்த விதி.

    அதன் அடிப்படையில் , வேட்டை மற்றும் பனிகால யுகத்தில் மனிதன் ஆடை அற்று இருந்த போது அவனுக்கு குளிரைப் போக்குவதற்கு பயன்பட்ட உடல் மயிரானது அவன் பின்னாளில் ஆடை உடுத்த ஆரம்பித்தவுடன் , அதன் தேவை குறைந்து போக பரிணாம வளர்ச்சிப் போக்கில் கொட்ட ஆரம்பித்து இன்று பொண்ணு பார்க்க போகும் போது வழுக்கை தலையை தடவி கவலைப் படும் அளவிற்கு வந்து நிற்கிறது.

    பின்னாளில் மனித குலத்துக்கு தலை பெரிதாகும் என்கிறது விஞ்ஞானம். மூளையை அதிகமாக பாவிப்பதால் இந்த நிலை வருமாம். இதை தொடர்பு படுத்தி , தலை பெருத்து அலையும் வேற்றுக் கிரக வாசிகள் அனைவரும் எதிர் காலத்து மனிதர்கள் தான் என பீதியை கிளப்பிவிட்டிருக்கிறது இன்னொரு விஞ்ஞான ஆய்வு. ( யப்பா தல சுத்துதுடா சாமீ).

    அதி சரி அதிக பாவனையில் உள்ள உறுப்புக்கள் பெரிதாகி , பாவனையற்ற உருப்பு அற்றுப் போகும் என்றால் தமிழனுக்கு எதிர் காலத்தில் மூளை அற்றுப் போய்விடும். அதிக பாவனையில் உள்ள உறுப்பு பெரிதாகும் என்றால் எந்த உறுப்பு பெரிதாகும் என்று இந்த இடத்தில் சொல்வது நாகரீகமாக இருக்காது.

    ஏதோ எனது மர மண்டையில் உள்ளதை சொன்னேன். தப்பு எண்டா பெரியவா நீங்க கோவிக்க படாது.

    ReplyDelete
    Replies
    1. //எமது மூதாதைகளிடம் காடப்பட்ட உடல் மயிர் , எம்மிடம் அதாவது இப்போது உள்ள சந்ததிகளிடம் அற்றுப் போனமைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி ஒன்று உள்ளது.

      அதாவது எந்த ஒரு உடல் பாகம் மனிதனுக்கு தேவையற்று இருக்கிறதோ அந்த பாகமானது பரிணாம வளர்ச்சிப்போக்கில் அற்றுப் போய்விடும். அதுபோல் அதிகமாக பாவனையில் இருக்கும் உறுப்பானது பெரிதாகும் என்கிறது அந்த விதி.
      //

      நல்ல தகவல்கள் நண்பரே , இதயே நீங்கள் ஒரு பதிவாகக்கூட போடலாம் .

      //அதன் தேவை குறைந்து போக பரிணாம வளர்ச்சிப் போக்கில் கொட்ட ஆரம்பித்து இன்று பொண்ணு பார்க்க போகும் போது வழுக்கை தலையை தடவி கவலைப் படும் அளவிற்கு வந்து நிற்கிறது.//

      வழுக்கை தலை என்று எல்லோரும் கேவலமாக பார்கின்றனர் , ஆனால் அது தான் ஆண்மையின் அடையாளம் , testosterone அதிகரித்தால் அது மூக்குக்குகீழே positive effect காமித்து மீசை தாடி வளரவைக்கும் , மூக்குக்குமேலே நெகடிவ் effect குடுத்து சொட்டயாகிவிடும் , வழுக்கயர்கள் ஆண்மை மிகுந்தவர்கள் .

      //அதி சரி அதிக பாவனையில் உள்ள உறுப்புக்கள் பெரிதாகி , பாவனையற்ற உருப்பு அற்றுப் போகும் என்றால் தமிழனுக்கு எதிர் காலத்தில் மூளை அற்றுப் போய்விடும்.//

      ஒரு ரகசியம் சொல்கிறேன் நண்பரே , எந்த ஒரு இனத்தின் மீது selection பிரஷர் அதிகரிக்கிறதோ , அந்த இனம் தடைகளை தாண்டி இந்த உலகில் நிலைத்து நிற்க பாடுபட்டு வேகமாய evolve ஆகும் , யூதர்கள் மீது நடத்திய அடக்கு முறை அவர்களது IQ அதிகரிக்க வைத்தது , உலகில் பாதி noble லாரேட்டுகள் யூதர்கள் , அவர்களுக்கு அடுத்து அதிக iq யாருக்கு தெரியுமா --- நமது சகோதரர்கள் ( ஈழதமிழர்கள் ), காரணம் உங்களுக்கே தெரியும் .

      // அதிக பாவனையில் உள்ள உறுப்பு பெரிதாகும் என்றால் எந்த உறுப்பு பெரிதாகும் என்று இந்த இடத்தில் சொல்வது நாகரீகமாக இருக்காது. //

      நானும் அதை பற்றி அடிக்கடி யோசித்து இருக்கிறேன் , same pinch .

      //ஏதோ எனது மர மண்டையில் உள்ளதை சொன்னேன். தப்பு எண்டா பெரியவா நீங்க கோவிக்க படாது.//

      நான் பெரியவா கிடையாது , ரொம்ப சின்னவன் , நீங்கள் என்னை நண்பா என்றே அழைக்கலாம்

      Delete
    2. //அவர்களுக்கு அடுத்து அதிக iq யாருக்கு தெரியுமா --- நமது சகோதரர்கள் ( ஈழதமிழர்கள் ), காரணம் உங்களுக்கே தெரியும்.//

      அப்படியா? சத்தியமாக தெரியாது எனக்கு. ஈழத்தமிழனாக இருந்தும் இந்த விடயம் தெரியாமல் போனது எனக்கு அவமானம். (இது எவ்வாறு உங்களுக்கு தெரியும் நண்பரே?) என்ன IQ இருந்தும் என்ன பயன்? இன்னமும் அல்லல் நிறைந்த வாழ்க்கை! எங்கு போனாலும் அடி வாங்குபவர்கள் நாம் ஆகத்தானே இருக்கிறோம்! எப்போது விடியுமோ எங்கள் கிழக்கு?

      Delete
    3. //நல்ல தகவல்கள் நண்பரே , இதயே நீங்கள் ஒரு பதிவாகக்கூட போடலாம் .//

      தங்கள் அளவுக்கு எனக்கு விஞ்ஞானம் வராது நண்பா!

      Delete
    4. //நான் பெரியவா கிடையாது , ரொம்ப சின்னவன் , நீங்கள் என்னை நண்பா என்றே அழைக்கலாம்//

      நான் பெரியவா என்று உங்களை விளித்தது உங்கள் அறிவை கருத்தில் கொண்டு, வயதை அல்ல. வயசசைப் பத்தி சொன்னதும் டாக்டருக்கு கோவத்த பாரு.lol

      Delete
    5. ஆமாங்க பதினாறு வயசு பையன் தானே என்று எல்லோரும் பகடி செய்கிறார்கள் , கோவம் கோவமா வருது

      Delete
    6. //தங்கள் அளவுக்கு எனக்கு விஞ்ஞானம் வராது நண்பா!//

      நண்பா எனக்கும் ரொம்ப எல்லாம் தெரியாது , ஆனால் உங்களோட கருது சொல்லும் விதமும் , அந்த சிக்கலான விடயத்தை எளிதாக + நகைச்சுவையாக ( சிம்பு :-p ) சொன்ன விதம் நன்றாய் இருந்தது

      Delete
    7. //அப்படியா? சத்தியமாக தெரியாது எனக்கு. ஈழத்தமிழனாக இருந்தும் இந்த விடயம் தெரியாமல் போனது எனக்கு அவமானம். (இது எவ்வாறு உங்களுக்கு தெரியும் நண்பரே?) //
      எனது நண்பன் ( அவன் வட இந்தியன் ) சொன்னது ,மற்ற விஷயம் என்றால் மறந்திருப்பேன் , நம்ம பெருமையை மற்றவர் சொன்னால் மறக்க முடியுமா ?

      //என்ன IQ இருந்தும் என்ன பயன்? இன்னமும் அல்லல் நிறைந்த வாழ்க்கை! எங்கு போனாலும் அடி வாங்குபவர்கள் நாம் ஆகத்தானே இருக்கிறோம்! எப்போது விடியுமோ எங்கள் கிழக்கு?//

      பக்கத்தில் இருந்தும் , எங்கள் சகோதரர்களுக்கு உதவ முடியாத பேடிகளாக இருக்கின்றோம் , இது போன்ற சில விஷயங்கள் தான் ஆண்டவனின் இருப்பை சந்தேகம் கொள்ள வைக்கிறது .

      Delete
    8. //ஆமாங்க பதினாறு வயசு பையன் தானே என்று எல்லோரும் பகடி செய்கிறார்கள் , கோவம் கோவமா வருது//

      ஏது பதினாறா? தாங்க முடியலடா சாமீ...... டாக்டரே இது கடவுளுக்கே அடுக்குமா?

      Delete
    9. //நண்பா எனக்கும் ரொம்ப எல்லாம் தெரியாது , ஆனால் உங்களோட கருது சொல்லும் விதமும் , அந்த சிக்கலான விடயத்தை எளிதாக + நகைச்சுவையாக ( சிம்பு :-p ) சொன்ன விதம் நன்றாய் இருந்தது//

      இந்த அடக்கம் தான் டாக்டரே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க ஆமை போல ஒரு ஆள் போங்கள்! அட அந்த மொழி நடை யாருக்கும் வரும். ஆனால் அறிவியல் அறிவு என்பது உங்களை போல ஒரு சிலருக்கு தான் வரும்!

      Delete
    10. //பக்கத்தில் இருந்தும் , எங்கள் சகோதரர்களுக்கு உதவ முடியாத பேடிகளாக இருக்கின்றோம் , இது போன்ற சில விஷயங்கள் தான் ஆண்டவனின் இருப்பை சந்தேகம் கொள்ள வைக்கிறது .//

      பேடி என்றெல்லாம் சொல்லாதிர்கள் , இதை விட ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு உதவுவதற்கு தான் காலம் உங்களை காத்திருக்க வைக்கிறது என்பது எனது எண்ணம்.

      ஆண்டவன் செய்வதற்கு இதில் ஒன்றுமே இல்லை நண்பா! அப்படி ஒருவன் இருந்திருந்தால் எனது 600000 சகோதரர்கள் ஒரு நாளில் மடிந்து போவதை பார்த்துக்கொண்டு இருந்திருக்க மாட்டான். எமது விதி அதை நாம் தான் எழுத வேண்டும்!

      Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...