Monday, April 16, 2012

பரிணாமத்தை ஆண்டியாக்குமா ஆன்டிபயாடிக் ?

நாய் ஏன் மரத்துல ஒன்னுக்கு அடிக்கிது ?


நீங்க ஏன் பஸ்சுல துண்டு போடுறீங்க ?

எல்லாருக்கும் தங்களின்  இடத்தை யாருக்கும் விட்டுக்குடுக்க மனம் இல்லை .
..................................................................................................................................................................

நமது அடிப்படை தேவைகள் உணவு , (பல சமயங்களில் )உடை  , உறைவிடம் .
.....................................................................................

நம்மளோட இடத்தை நாம் பாதுகாத்துக்கொள்வதில் நமக்கு ரொம்ப அக்கறை .

இதுக்கு பேருதான் Territorial  behavior .

நம்ம இடத்தில அடுத்தவன் நுழையாம இருக்க நாம என்ன பண்ணுவோம் ?

காம்பவுண்டு   கட்டுவோம் , அதுல யாரும் விளம்பரம் எழுதகூடாதுன்னு நாமளே பெருசா எழுதி வைப்போம் .



நம்ம இடத்துல யார் நுழைந்தாலும் நமக்கு கோவம் வரும் தான் .


நாடுகள் லெவல்ல   பாத்தோம்னா இதுக்கு தீர்வு    துப்பாக்கி .


தனிமனித அளவில் பாத்தோம்னா இதுக்கு நாம் கையில் எடுப்பது  கையில் கிடைக்கும்  ஆயுதம் .


இந்த இடச்சண்டை இவ்வாறு ரத்தகளறியாக நடக்கலாம் , இல்லை என்றால் கண்ணுக்கு தெரியாத அளவும் நடக்கலாம் .
..................................................................

கோரல் reef  கள் ஆழ்கடலில் மெதுவாக வளரும் , அவை நன்றாக வளர ஒரு பிடிமானம் தேவை , அப்படிப்பட்ட நல்ல பிடிமானமுள்ள  இடத்தில பல வகை கோரல்கள் வளரும் .


அந்த இடத்தை முழுதும் ஆக்கிரமிப்பதில் அவற்றுக்குள் போட்டி நடக்கும் . பார்க்க வெளியில் ஒன்றும் தெரியாது . ஆனால்  மெதுவாக ஒன்றை ஒன்று கபளீகரம் செய்ய முயற்சிக்கும் . 





யார் யாரை வேகமாய் தின்று தீர்க்கிறார்களோ   அவர்களுக்கு வெற்றி . அந்த இடம் அவர்களுக்கு சொந்தமாகிவிடும் .

..........................................

சில வகை பூஞ்சைகள் , நுண்ணுயிரிகள் தங்களை சுற்றி  மற்ற உயிரினங்கள் வளரக்கூடாது என்பதற்காக சில வகை பொருட்களை உற்பத்தி செய்யும் .

 Louis Pasteur மற்றும்  Robert Koch  1877 இல் ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் வளர்ச்சியை வேறு சில கிருமிகள் தடுப்பதை கண்டறிந்தனர் .

1928 இல்  Alexander Fleming Penicillium எனும் பூஞ்சை தன்னை சுற்றி பாக்டீரியாக்கள் வளருவதை தடுப்பதற்காக   ஒரு பொருளை உற்பத்தி செய்வதை கண்டறிந்தார் , அதற்கு பெனிசிலின் என்று பேர் வைத்தார் .

இதை பின்பற்றி பல்வேறு பூஞ்சைகள் மற்றும் கிருமிகளில் இருந்து ஆன்டிபயாடிக் மற்றும் antimicrobial களை உருவாக்கினர் .
.......................................................................................
antibiosis, meaning "against life,"  - அதாவது உயிர்களுக்கு எதிரான என்று பொருள் .


ஆன்டிபயாடிக்  என்பது....


"any substance produced by a microorganism that is antagonistic to the growth of other microorganisms in high dilution ."

அதாவது இன்னொரு நுண்ணுயிரியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் ,
அதன் நோக்கம் அதை சுற்றி மற்ற நுண்ணுயிரிகள் வளராமல் தடுப்பதற்காகஅதனால் கையாளப்படும் ஒரு தந்திரம் .

"An antibacterial is a compound or substance that kills or slows down the growth of bacteria.The term is often used synonymously with the term antibiotic(s)".
.....................................................................................................
ஒருவனை திரும்ப திரும்ப அறைந்தால் அவனுக்கு தோல் தடித்து அந்த அறை உரைக்காத அளவுக்கு சுரணை  அற்று போய்விடும் அல்லவா 


அதுபோல தான் ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமலும் , தவறான முறைகளிலும் உபயோகப்படுத்துவதினால் அவற்றிக்கு எதிராக, பாக்டீரியாக்கள் தடுப்பாற்றலை வளர்த்துக்கொண்டன .
..........................................................

ஆனால் சிலரை அடிப்பதும் ஜெயிப்பதும் ரொம்ப கடினம் .

ஏன் என்றால் பிறவியில் இருந்தே அவர்களுக்கு எதிர்ப்பாற்றல் அவர்கள் உடல் பலத்தால் சாத்தியப்படும் .


அது போல தான் சில பாக்டீரியாக்கள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கு ஏற்ப பரிணாமத்தின் துணை கொண்டு  இந்த ஆன்டிபயாடிக்கினை எதிர்த்து வளரும் சக்தியினை கைவரப்பெற்றிருக்கும் .
.........................................................................................

Vancomycin என்பது Amycolatopsis orientalis எனும் கிருமியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஆன்டிபயாடிக், 


அந்த Amycolatopsis orientalis கிருமி பழங்காலதிலிருந்தே இருந்து வருகிறது , அந்த காலத்தில் அதனை எதிர்த்து வளரும் சக்தி படைத்த ஒரு கிருமியினை தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள் . 



இந்த செய்தியை கேட்ட நமது நண்பர்கள் அது எப்புடி சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆன்டிபயாடிக் மருந்துக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிருமி எதிர்ப்பாற்றலை கொண்டிருக்க  முடியும் ? எனவே பரிணாமம் சுத்தப்பொய் எனும் முடிவுக்கு வந்துள்ளனர் .



http://www.ethirkkural.com/2012/04/blog-post.html


Vancomycin சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக்.


அதாவது discovered , invented அல்ல .


பல்லாயிரம்   வருடத்திற்கு முன்பே இருந்து வந்ததை இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள் .

..............................................................................

குறிப்பிட்ட அந்த பதிவில் என்னை மிகவும்  சங்கடத்தில் ஆழ்த்திய இரண்டு வரிகள் 

1)  "Nothing makes sense in biology except in the light of evolution"
"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது"

இப்படியாக சிலபலர் கூறுவதை நாம் பார்த்திருக்கலாம். இம்மாதிரியான வாசகம் எனக்கு குழப்பத்தையே தந்துள்ளது. 


2)உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும்.



என்னை பொறுத்த வரை  சில தீர்வே இல்லாத நோய்களுக்கு பரிணாமம் தான் தீர்வு .

அப்படிப்பட்ட நோய்களுக்கு human மெடிசின்காரர்கள்  பரிணாம வழியாக அணுகினால் எளிதில் தீர்வு காணலாம் என எனது veterinary அறிவு கூறுகிறது .

ஆனால் ஏனோ அந்த நோய்க்கு என்னென்னமோ வழிகளில் ஆராய்ச்சி செய்தாலும் , நான் யோசித்து வைத்திருக்கும் வழிமுறையில் ஆராய்ச்சிகள் அரிதின் அரிதாகவே நடை பெற்று வருகிறது .

அதை பற்றி மிக விரைவில் ( அதாவது 2 மாதம் கழித்து) பதிவிடுகிறேன் , அது யாராவது ஆராய்ச்சியாளர் கண்ணில் பட்டு ஏதாவது நல்லது நடந்தால் சரி .

அந்த நோய் ......................................

கடகம் @ cancer   .

15 comments:

  1. நல்ல பதிவு...

    வேற யாராவது பண்ணனும்ன்னு ஏன் நெனக்கிறிங்க...? ஒரு டாக்டர் நீங்களே பண்ணலாமே....?

    ReplyDelete
  2. என்ன செய்ய ,ஆராய்ச்சி பாதையில் இருந்து நான் வைதியப்பாதைக்கு மாறிவிட்டேன் நண்பரே ,

    ReplyDelete
  3. வாங்க ரொம்ப நாளுக்கு அப்புறம் டாக்டர்! பென்சுலின் கண்டு பிடிப்பு தற்செயலானது தானே?

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ தெரியல அறிவியலில் பல முக்கிய கண்டுபிடிப்புகள் தற்செயலாகவே நடந்து வந்திருக்கிறது

      Delete
  4. வாங்க நண்பர் டாக்டர் டூலிட்டில் அருமையான் தகவ்ல்கள்.மிக்க நன்றி.

    பரிணாம் எதிர்ப்பளர்கள் ஏன் இதனை பரிணாம் எதிர்ப்பாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதன் விள்க்கம்.

    அவர்கள் இயறகித் தேர்வு என்பதை சரியாக புரிந்து கொள்வதே இல்லை.
    அவர்களின் வாதம் இப்படி இருக்க வேண்டும்.

    1.எதிர்ப்பு சக்தி கொண்ட பாக்டீரியா ஏற்கெனவெ இருந்தவை.புதிதாக் உருவாகவில்லை.

    2.ஆகவே பரிணாம்ம மூலம் புது உயிரினங்கள்(பாக்டீரியாக்கள்) தோன்றுவது என்பது தவறு.

    இதற்கு மறுப்பு என்ன சொல்ல்வேண்டும்.

    சிறு மாற்றங்கள்(முயுடேசன்) பல் வகை பாக்க்டீரியாக்களை தோற்றுவிக்கிறது.

    100 வகை பாக்டீரியாக்கள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.
    இதில் 2 வகை மட்டும் எதிர்ப்பு சக்தி கொண்டவை.மருதினால் 98 அழிய இந்த இருவகைகளின் வழித் தோன்றல்கள் பல்கி பெருகுகின்றன.அவைகளிலும் சிறுமாற்றங்கள்,கிடைமட்ட ஜீன் பரிமாற்றத்தால் பல் வகைகள் உருவாகும்.

    சூழலுக்கு ஏற்ற மாற்ற‌ம் உடைய வகைகளே தப்புகின்றன.சூழலை பொறுத்து சிறு மாற்றம் ஏற்படுவது இல்லை இது லாமார்க்கியன் கொள்கை.

    பரிணாம் எதிர்ப்பாளர்களும் சரி சில அறிய முயற்சிப்பவர்களும் சூழல் ஏற்பட்டவுடன் அதற்கேற்படி மாற்ற‌ங்கள் உருவாகும் என நினைப்பது தவறு.
    ஏன் உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் அழிந்தது எனில் அவை சூழலுக்கு தாக்கு பிடிக்கும் உயிரின வகைகளை பெற்று இருக்கவில்லை.

    இதனை அருமையாக் படம் போட்டு விள்க்கி உள்ளீர்கள்!

    உங்கள் தளம பார்த்தென் அருமை டாக்டர்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாக்டீரியாக்களில் பரிணாமம் வேகமாக நடக்கக்காரணம் அவை சில மணிநேரங்களிலேயே பல்கிபெருகிவிடும் ஆற்றலை கொண்டதால் தான் , ஆனால் generation இண்டர்வல் மிருகங்களில் அதிகம் என்பதால் அதை நாம் உணருவதற்கு காலம் பிடிக்கும் , இது பரிணாம எதிர்ப்பு நண்பர்களுக்கு சாதகமாகிவிட்டது . கருத்துக்கு நன்றி சார்

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வழக்கம்போல, படம் பார்த்து நீ சொன்ன கதையினை புரிந்து கொண்டேன்! அந்த ரஜினி போட்டோவை என் கணினியின் முகப்புப் பக்கத்தில் வைத்துவிட்டேன். வடிவேலு வாங்கிய அடியைப் போல் நானும் கொஞ்சம் அடிகளை என் மனைவியிடம் வாங்கிவிட்டேன். போதும்ல?

    ReplyDelete
    Replies
    1. என்னால் எதோ நல்லது நடந்தால் சரி அண்ணா

      Delete
  7. டாக்டருக்கு வணக்கம் !இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை காணவில்லையே, இரண்டு நாட்கள் முன்பு கூட வந்து உங்களது பதிலுக்காக பார்த்தேன். ஆனால் பதில் இல்லை, பின்னூட்டம் இருந்தது . இன்று இரண்டுமே இல்லையே?

    ReplyDelete
  8. வணக்கம் நண்பா ,
    //இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை காணவில்லையே, இரண்டு நாட்கள் முன்பு கூட வந்து உங்களது பதிலுக்காக பார்த்தேன். ஆனால் பதில் இல்லை, பின்னூட்டம் இருந்தது . இன்று இரண்டுமே இல்லையே?//

    அப்படியா ? எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது நண்பா , நான் உங்களை போன்ற நண்பரின் கமெண்ட்டுகளை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம் , இதில் எதோ ஒரு technical தவறு நடந்திருக்கலாம் , எதற்கும் செட்டிங்க்சை துலாவி பார்க்கிறேன் நண்பா

    ReplyDelete
    Replies
    1. the comment was in spam , I dunno y ,இனி இது போல நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்

      Delete
    2. சரி ! விடுங்க நண்பா, இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. போட்ட பின்னூட்டத்தை காணலேயே என்று கேட்டேன் அவளவு தான். பேஸ்புக்கில் தங்களது கோரிக்கை கிடைத்தது, சந்தோஷம்.

      முக்கியமான ஒரு விடயம் , எனது கடைசி பதிவில் உங்களுக்கு ஒரு வேலைவைத்திருக்கிறேன். நம்ம கடைபக்கம் வந்து ஒரு எட்டு பார்த்துவிட்டு போங்கள்!

      Delete
  9. தற்செயலாகத்தான் பார்க்க முடிந்தது உங்கள் பதிவுகளை. பயனுள்ள பதிவு தொடருங்கள் மருத்துவரே. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. thanks sir , I ll surely post more informative things in upcoming days

      Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...